தமிழக அரசு விருது

தொழில் முனைவோர் கையேடு புத்தகத்துக்காக எழுத்தாளர் எஸ்.எல்.வி. மூர்த்திக்கு தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. சிறு தொழில் முனைவோர் மத்தியிலும் தொழில் தொடங்கும் ஆர்வம் கொண்டவர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்ற புத்தகம் இது.

தொழில் முனைவோர் கையேடு புத்தகத்தை வைத்து நாங்கள் தயாரித்த கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியும் நல்ல கவனம் பெற்றது.

மூர்த்தி சாருக்கு கிழக்கு ஆசிரியர் குழுவின் சார்பாக வாழ்த்துகள்!

எம்.ஆர். ராதா கொடுத்த விருது

நான் வாங்கப்போகும் முதல் விருது இது. எம்.ஆர். ராதாயணம் புத்தகத்துக்காக. சென்ற வாரம் தகவல் வந்தது. விருதை வழங்குபவர்கள் – திருப்பூர் கலை இலக்கியப் பேரவை. புத்தகத்துக்கு ‘சிறப்பு விருது’ என்று அறிவித்துள்ளார்கள். மார்ச் இறுதியில் விழா இருக்கலாம்.

பரிசுக்குத் தேர்வாகியுள்ள கிழக்கு பதிப்பகத்தின் பிற நூல்களின் பட்டியல் : http://thoughtsintamil.blogspot.com/2009/02/blog-post_17.html

என்னோடு சேர்ந்து தங்களது நூல்களுக்காக விருது பெறவுள்ள ஆர். முத்துக்குமார், என். சொக்கன், ஜெ. ராம்கி, லிவிங் ஸ்மைல் வித்யா, குணசேகரன், ஜோதி நரசிம்மன் ஆகியோருக்கு என் வாழ்த்துகள்.

லொள்ளு அவார்ட்ஸ் 2008

2008ன் லொள்ளு அவார்ட்களுக்காக, பல்வேறு பிரிவுகளின்கீழ் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டவர்கள்.

சிறந்த குடும்பச் சித்திரம்

சிறந்த உண்மை விளம்பி

சிறந்த சுய விளம்பரதாரர்

சிறந்த ஆக்‌ஷன் காட்சி

சிறந்த உலகம் சுற்றும் வாலிபி & புடைவைக் கடை மாடல்

சிறந்த உலக சினிமா

சிறந்த ரங்க ராட்டினம்

சிறந்த காதல் காட்சி

சிறந்த ட்யூப் லைட்

வாழ்நாள் சாதனையாளர் விருது

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! (இவ்விடம் புத்தாண்டுப் பரிசுகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஏற்றுக்கொள்ளப்படும்.)