Main menu:

தமிழக அரசியலில் எனது தொடர் புத்தம் புது பூமி வேண்டும்

எனது புத்தகங்கள்

அகம் புறம் அந்தப்புரம்
முகலாயர்கள்
யூதர்கள் - வரலாறும் வாழ்க்கையும்
செங்கிஸ்கான்

Site search

Recent Posts

Categories

நட்பு வட்டம்

Archives

site stats

RSS RSS

Archive for 'புத்தகம்'

‘இந்த எண்ணம் மிஸ்டர் எம்.ஜி.ஆருக்கு இருக்குமா?’

காலையிலேயே சேகர் என்ற நண்பர் தொலைபேசியில் அழைத்தார். அவர் ஜே.பி. சந்திரபாபுவின் குரலில் பாடும் மேடைப் பாடகர். எனது கண்ணீரும் புன்னகையும் புத்தகத்தின் ரசிகர். அவ்வப்போது அழைத்து சந்திரபாபு குறித்து பேசுவார். அவர் பேசி முடித்ததிலிருந்து எனக்குள் சந்திரபாபுவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

*

‘நான் குடிகாரன் என்பது ஊரறிந்த உலகறிந்த ஒரு விஷயம். ஒவ்வொரு மனிதனையும் அழைத்து அவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்துப் பாருங்கள். அவன் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை ஒளிவு மறைவின்றி கூறிவிடுவான். அழுது [...]

‘கையெழுத்து வாங்கி என்ன பண்ணப் போறீங்க?’

சென்ற வாரம் (22 ஜூலை, 2010) இந்த நேரத்தில் அந்த அருமையான பள்ளிக்கூடத்தில் இருந்தேன். பூம்புகார் அருகில் மேலையூரில் அமைந்துள்ள சீனிவாசா மேல்நிலைப்பள்ளி அது. மாணவர்கள் படித்தே தீர வேண்டிய புத்தகங்கள் என்ற தலைப்பில் பேசினேன். இதே தலைப்பில் பேசுவதற்கு முதலில் என். சொக்கன் செல்வதாக இருந்தது. அவர் பெங்களூரிலிருந்து வந்து செல்வதற்கு டிக்கெட் பிரச்னை இருந்ததால், நான் சென்றேன்.
விருந்தினராகச் சென்று மாணவர்களிடையே இதுதான் எனக்கு முதல் அனுபவம். மிக நல்ல அனுபவம். சொக்கனுக்கு நன்றி. அந்தப் [...]

‘இதில் என்ன பிரதர் தப்பு?’ – ஜெமினி

ஜெமினி ஸ்டூடியோவில் வெறும் காஸ்டிங் அசிஸ்டெண்ட்டாக இருந்தபோதே, ஜெமினி ஸ்டூடியோவின் படங்களில் கதாநாயகியாகப் புகழ்பெற்றிருந்த புஷ்பவல்லியை தன் காதல் வலையில் சிக்க வைத்தார் ஜெமினி கணேசன்.
புஷ்பவல்லி பார்க்க ரொம்ப அழகாக இருப்பார். தாசி அபரஞ்சி, பால நாகம்மா ஆகிய படங்களில் ரொம்பவும் வசீகரமாக நடித்துப் புகழ் பெற்றிருந்த நடிகை அவர். தென்னக சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே அழகுக்குப் புகழ்பெற்ற கதாநாயகிகளில் ஒருவர் பத்மினி. அவரே வியக்க நோக்கிய புஷ்பவல்லி தான் சினிமா உலகில் ஜெமினி கணேசனுக்குக் [...]