Archive for 'பொது'
‘கையெழுத்து வாங்கி என்ன பண்ணப் போறீங்க?’
சென்ற வாரம் (22 ஜூலை, 2010) இந்த நேரத்தில் அந்த அருமையான பள்ளிக்கூடத்தில் இருந்தேன். பூம்புகார் அருகில் மேலையூரில் அமைந்துள்ள சீனிவாசா மேல்நிலைப்பள்ளி அது. மாணவர்கள் படித்தே தீர வேண்டிய புத்தகங்கள் என்ற தலைப்பில் பேசினேன். இதே தலைப்பில் பேசுவதற்கு முதலில் என். சொக்கன் செல்வதாக இருந்தது. அவர் பெங்களூரிலிருந்து வந்து செல்வதற்கு டிக்கெட் பிரச்னை இருந்ததால், நான் சென்றேன்.
விருந்தினராகச் சென்று மாணவர்களிடையே இதுதான் எனக்கு முதல் அனுபவம். மிக நல்ல அனுபவம். சொக்கனுக்கு நன்றி. அந்தப் [...]
Posted: July 29th, 2010 under அனுபவம், புத்தகம், பொது.
Tags: சீனிவாசா மேனிலைப்பள்ளி, பள்ளி மாணவர்கள், புத்தகங்கள், பூம்புகார், மேலையூர்
Comments: 2
ஆயிரம் தீவுகள்
தமிழக அரசியல் இதழில் எழுதிவரும் புத்தம் புது பூமி வேண்டும் தொடரிலிருந்து ஓர் அத்தியாயம்.
அப்போது வானமும் பூமியும் ஒன்றாக ஒட்டித்தான் கிடந்தன. ரூ என்ற கடவுள்தான் வானத்தைத் தூக்கி உயரே நிறுத்தி வைத்தார். பின்பு ரூ, புதிதாக படகு ஒன்றைக் கட்டினார். எதற்கு? பூமி முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக. அது, ரூவின் அழகான சகோதரி ஹினாவின் ஆசை.
இந்த பூமி எவ்வளவு பெரியது? எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது? எங்கெல்லாம் புதிதாக நிலங்கள் இருக்கின்றன? இப்படி [...]
Posted: July 6th, 2010 under சரித்திரம், தொடர், பொது.
Tags: தமிழக அரசியல், பாலிநேசியர்கள், பாலிநேசியா, புத்தம் புது பூமி வேண்டும்
Comments: 1
முத்துராமன் அறுவை சிகிச்சை குறித்து
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
சிறுநீரக செயல் இழப்பினால் சிகிச்சை பெற்று வரும் நண்பர் முத்துராமன் குறித்து ஏற்கெனவே எழுதியிருந்தேன். பலரும் தங்கள் தளங்களில் உதவிகேட்டு விவரங்களை வெளியிட்டிருந்தீர்கள். அவரது அறுவை சிகிச்சைக்காக பலரும் உதவி அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
தற்போது, முத்துராமனுக்குச் செய்யப்படவிருந்த அறுவை சிகிச்சை சில மருத்துவ காரணங்களால் உடனடியாகச் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அவரது தாயார் சிறுநீரகம் தர முன் வந்தாலும் கடைசிகட்ட பரிசோதனைகளின் முடிவில் அவருடைய சிறுநீரகத்தை முத்துராமனுக்குப் பொருத்தினால் [...]
Posted: June 1st, 2010 under அறிவிப்பு, பொது.
Tags: முத்துராமன்
Comments: 2




