Archive for April, 2009
குறளின் 134வது அதிகாரம்!
134. தேர்தல் அதிகாரம்.
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் குழப்பங்களும்
கூடி இருப்பதே காங்கிரஸ்.
இராமர்என்ப ஓடும் ரதமென்ப இவ்விரண்டும்
யுக்தியென்ப தேர்தலில் அத்வானிக்கு.
திகாரினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
வருண்வாயினால் சுட்ட வடு.
வெட்டிய பொழுதில் பெரிதுவக்கும் தன்குருவை
எம்பி எனக்கேட்ட அய்யா.
அம்மா தோழிக்குஆற்றும் நன்றி பின்புலத்தில்
முதன்மையாய் இருப்பச் செயல்
கூட்டணியைக் கவிழ்ப்பாரே ஒருவர் – அவர்நாண
அடுத்த அணியில் சேர்ந்துவிடல்.
தோன்றின் அழகிரியாய் தோன்றுக அஃதிலார்
மதுரையில் தோன்றாமை நன்று.
எல்லா ஓட்டும் ஓட்டல்ல – பலருக்கு
சாதிசன ஓட்டே ஓட்டு.
ஓரணிவிட்டு முற்பகல் விலகில் தனிஅணி
பிற்பகல் தாமே வரும்.
அனுதாப அலை உடைத்தாயின் – தேர்தலில்
பயனும் பதவியும் [...]
Posted: April 29th, 2009 under அரசியல், தேர்தல் 2009, நகைச்சுவை.
Tags: அதிமுக, அத்வானி, அம்மா, அய்யா, அழகிரி, கட்சி, காங்கிரஸ், சோனியா, திமுக, திருக்குறள், தேர்தல், தோழி, பிஜேபி, லொள்ளு, வருண் காந்தி
Comments: 7
ஆடியது காங்கிரஸ் கூடாரம்!
(தேர்தல் செய்திதான். ஆனால் கொஞ்சம் பழசு.)
சுதந்தரம், சமஸ்தானங்கள் இணைப்பு இவையெல்லாம் நிகழ்ந்த பிறகும் பல மகாராஜாக்களுக்குப் பழைய நினைப்பும் மிதப்பும் குறையவில்லை. சொல்லப்போனால் அதுவரை மன்னர் ஆட்சிக்குப் பழகியிருந்த மக்கள் மனத்தில் மகாராஜாக்களின் மீதான மதிப்பு குறையாமல்தான் இருந்தது.
1952. ராஜஸ்தான் மாநிலத்துக்கான முதல் சட்டசபை, இந்தியாவின் முதல் மக்களவைக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. ‘எவனாவது தேர்தல்ல நின்னீங்க, மானியம் கிடையாது’ என்று நேரு, முன்னாள் மகாராஜாக்களை மிரட்டியதாக ஒரு தகவல் உண்டு.
ஜோத்பூரின் கடைசி மகாராஜா ஹன்வந்த் சிங்கும் தேர்தலைச் [...]
Posted: April 24th, 2009 under அரசியல், சரித்திரம், பொது.
Tags: அகம் புறம் அந்தப்புரம், காங்கிரஸ், ஜோத்பூர், தேர்தல், நேரு, மகாராஜா, ராஜஸ்தான்
Comments: 1
ஹிட்லரின் குழந்தை முகம்
யாரோ ஒரு குழந்தைக்கு ஹிட்லர் மீசை வைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறேன் என்றெல்லாம் தப்பாக நினைக்க வேண்டாம். இது ஹிட்லர் குழந்தையாக இருக்கும்போது எடுத்த புகைப்படம்தான். மீசை வைத்துப் பார்க்கத் தோன்றியது.
நன்றி : விக்கிமீடியா காமன்ஸ்
Posted: April 21st, 2009 under Uncategorized.
Comments: 3




