Tag: சென்னை புத்தகக் காட்சி
பட்டியல் 2010
தி.நகர் சோஷியல் கிளப் என்பது அன்று அதன் காண்டீனுக்குப் பிரசித்தமானது. அங்கு தஞ்சாவூர் டிகிரி காபி கிடைக்கும். நான்கணா. அதாவது இருபத்தைந்து காசுக்குக் கள்ளிச் சொட்டுப் போல ஒரு தம்ளர் காபி. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் பாண்டி பஜாரில் சாந்தா பவன் என்ற சிற்றுண்டிச் சாலை அதன் தக்காளிச் சட்னிக்காகப் பெரும் புகழ் பெற்றது. நாகர்கோயில் சுந்தர ராமசாமி வரை அதன் மணம் வீசியிருந்தது. இப்போது சரவண பவன் எல்லா பேட்டைகளின் எல்லா சிற்றுண்டிச் சாலைகளையும் பின்தள்ளி [...]
Posted: January 26th, 2010 under புத்தகம், பொது.
Tags: 2010, சென்னை புத்தகக் காட்சி
Comments: 5
‘என் புத்தகத்தை வாங்காதீங்க!’
கிழக்கு பதிப்பகம் நீயா நானா கோபிநாத்துடையதாக மாறிய கதை தெரியுமா? இருங்கள், அதை அப்புறம் சொல்கிறேன்.
வாசகர்கள் – பதிப்பாளர்கள் திருவிழா இனிதே முடிந்துவிட்டது. சென்ற வியாழன் தவிர மற்ற எல்லா நாள்களும் புத்தகக் கண்காட்சியில் இருந்தேன். பல்வேறு புதிய (வலைப்பதிவு) நண்பர்களை, வாசகர்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.
நிறைய வாங்கினேன். கண்காட்சியில், பிளாட்பாரத்தில் வாங்கிய புத்தகங்களை பொங்கல் விடுமுறைக்குப் பின் சாவகாசமாகப் பட்டியலிடுகிறேன். ஆனால் கிழக்கு ஸ்டாலுக்கு வந்து போனவர்களெல்லாம் ராஜீவ் கொலை வழக்கு புத்தகத்தை வாங்கிச் சென்றார்கள். [...]
Posted: January 11th, 2010 under அனுபவம், புத்தகம், விமரிசனம்.
Tags: சென்னை புத்தகக் காட்சி
Comments: 2
செ.பு.கா.நா.வா.பு.
எந்தப் புண்ணியவான் என்ன காரணத்துக்காக ஆரம்பித்து வைத்தானோ தெரியவில்லை. பலரும் செய்கிறார்கள். ஆகவே நீண்ட யோசனைக்குப் பிறகு நானும் அதைச் செய்வதாக முடிவெடுத்து துணிந்து இறங்கிவிட்டேன். என்ன நோக்கத்தில் அவர்கள் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் உள்நோக்கம் ஏதுமின்றி நானும் செய்கிறேன். இந்தச் செயலும் கொட்டாவி போலத்தான். பரவுகிறது. யாராவது ஒருவர் திடீரென சும்மா மேலே பார்த்தால்கூட மற்றவர்களுக்கும் மேலே பார்க்கத் தோன்றுமே அப்படிப்பட்டதுதான். ஆகவே நானும்…
நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியின் உள்ளேயும் வெளியேயும் நான் [...]
Posted: January 20th, 2009 under அனுபவம், புத்தகம்.
Tags: சென்னை புத்தகக் காட்சி, புத்தகங்கள்
Comments: 4




