குறளின் 134வது அதிகாரம்!

134. தேர்தல் அதிகாரம்.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் குழப்பங்களும்
கூடி இருப்பதே காங்கிரஸ்.

இராமர்என்ப ஓடும் ரதமென்ப இவ்விரண்டும்
யுக்தியென்ப தேர்தலில் அத்வானிக்கு.

திகாரினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
வருண்வாயினால் சுட்ட வடு.

வெட்டிய பொழுதில் பெரிதுவக்கும் தன்குருவை
எம்பி எனக்கேட்ட அய்யா.

அம்மா தோழிக்குஆற்றும் நன்றி பின்புலத்தில்
முதன்மையாய் இருப்பச் செயல்

கூட்டணியைக் கவிழ்ப்பாரே ஒருவர் – அவர்நாண
அடுத்த அணியில் சேர்ந்துவிடல்.

தோன்றின் அழகிரியாய் தோன்றுக அஃதிலார்
மதுரையில் தோன்றாமை நன்று.

எல்லா ஓட்டும் ஓட்டல்ல – பலருக்கு
சாதிசன ஓட்டே ஓட்டு.

ஓரணிவிட்டு முற்பகல் விலகில் தனிஅணி
பிற்பகல் தாமே வரும்.

அனுதாப அலை உடைத்தாயின் – தேர்தலில்
பயனும் பதவியும் அது.

கட்சிகளுக்கும் உண்டோ கொள்கைதாழ்? தேர்தலில்
பகைஅணியே இடம் தரும்.

Leave a Comment