ஓனர்கள் ஜாக்கிரதை!

பிடிக்கக்கூடாத இடத்துல யாராவது பிடிச்சுக்கிட்டு இருந்தா பிடிச்சுக் கொடுக்கலாம்னு மொட்டையா சொல்லிப்புட்டாங்க. எங்கெல்லாம் பிடிக்கலாம்? பிடிக்கக்கூடாத இடத்துல பிடிச்சா, பிடிக்கறவங்களை யாரெல்லாம் பிடிக்கலாம்? பிடிச்சவங்களைப் பிடிச்சு என்ன பண்ணலாம்? இப்படி ஒரு மண்ணும் பிடிபடலை. பிடிக்கறவங்க எந்தவிதச் சங்கடமும் இல்லாம பிடிச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. அப்போ நடுவண் அரசு கொண்டுவந்த தடை எதுக்கு?

சமீபத்தில் என் கையில் கிடைத்த பசுமைத் தாயகத்தின் நோட்டீஸ் இது. நடைமுறையில் சாத்தியப்படுமா என்று புரியவில்லை. சாத்தியப்பட்டால் சந்தோஷமே!

Leave a Comment