ஜே.கே. ரித்தீஷின் சொத்து மதிப்பு எவ்வளவு?

ரஜினி சாருக்கு எப்படி பாலச்சந்தர் சாரோ, சினிமான்னா எனக்கு குரு சின்னி ஜெயந்த் சார்தான். நடிக்கத் தெரியாத ஒரு நடிகனும் – நாந்தான், டைரக்‌ஷன் தெரியாத ஒரு டைரக்டரும் – என் குருநாதர் சின்னி ஜெயந்த் – சேர்ந்து எடுத்த படம்தான் கானல் நீர்.

– ஜே.கே. ரித்தீஷ் உதிர்த்த அருமையான வார்த்தைகள் இவை. தொடர்ந்து கானல் நீர் பற்றி அவர் உதிர்த்த சொற்கள் ஒவ்வொன்றும் ஹாஹாஹா…

கேள்வி : கானல் நீரை நீங்களாவது முழுசாப் பார்த்தீங்களா?

பதில் : படத்தோட டைட்டிலுக்கு கீழே நானே ஒரு வரி போட்டிருப்பேன். கானல் நீர் – a true punishment.

கேள்வி : கானல் நீர் படத்தை ஏன் கலைஞருக்குப் போட்டுக் காட்டல?

பதில் : அவ்வளோ பெரிய தண்டனையை தலைவருக்குக் கொடுக்க விரும்பல.

கடந்த ஞாயிறு (மார்ச் 28, 2010) விஜய் டீவியில் காலை பத்து மணிக்கு ஒளிபரப்பான வாங்க பேசலாம் நிகழ்ச்சியின் இந்த வார கெஸ்ட் ஜே.கே. ரித்தீஷ்.

டெல்லி கணேஷ், அப்துல்லா (X பெரியார்தாசன்), புஷ்பவனம் குப்புசாமி கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் செம நக்கல். ரித்தீஷும் கொஞ்சம்கூட டென்ஷனே ஆகாமல் நகைச்சுவையுடனேயே சமாளித்தார்.

சில கேள்விகள்

* அய்யா, நீங்க டெல்லிக்குப் போனதால, கோடம்பாக்கமே அப்படியே வெறிச்சோடிப் போயிருச்சாமே? யார் கையிலயும் காசில்லை, ஒண்ணும் நிலைமை சரியில்லையாமே?

* திடீர்னு சுனாமி மாதிரி வந்தீங்க, அரசியல், சினிமான்னு. நீங்க யாரு? எங்க இருந்து வந்தீங்க?

* சினிமால உங்களுக்கு நிறைய க்ளோஸ்-அப், பேனர், பேப்பர்ல எல்லாம் உங்களை அடிக்கடி பார்க்கறோம். பார்லிமெண்ட்லயும் கேமரா இருக்கு. ஆனா ஒரு தடவைகூட அந்த கேமராவுல நீங்க வரலியே?

* யாரைக் கேட்டாலும் நிறைய அள்ளிக் கொடுப்பாரு ரித்திஷுன்னு சொல்றாங்க. சார், எத்தனைக் கோடி உங்க கைவசம் இருக்கும்?

* இங்க சினிமாவுல நல்ல ஃபைட்லாம் பண்றீங்க. பார்லிமெண்ட்லயும் அதுக்கான வாய்ப்பெல்லாம் இருக்குது. எப்படி பண்ணிருக்கீங்களா?

* நீங்க கட்-அவுட் வைச்சா மட்டுமே யாருமே எடுக்கச் சொல்ல மாட்டேங்கறாங்களே, ஏன் சார்?

* நாயகன் செமயா ஃபைட் போட்டீங்க. ஜே.கே. ரித்தீஷ் சார் இருக்குறாரு, தீவிரவாதிகளுக்குச் சவால் விடுறோம். இப்போ வந்து பாருங்கடா பார்லிமெண்டுக்கு…

* இந்த கவுன்சிலரு, வார்டு உறுப்பினரு, எம்.எல்.ஏ.ன்னு படிப்படியா வராம, டைரக்டா எம்.பி.ன்னு முடிவு பண்ணுனீங்களே, எப்படி?

* செட்டிலானா லைஃப்ல ஜே.கே.ரித்தீஷ் மாதிரி செட்டில் ஆவணும்னு பொதுவா பேசிக்கறாங்களே, நீங்க கேள்விப்பட்டீங்களா?

* அண்ணன்னு ஒரு படம், தம்பின்னு ஒரு படம் – ரெண்டு படத்துலயும் நடிக்க ஒரே நேரத்துல கால்ஷீட் கேட்டு வராங்க. நீங்க எதுல நடிப்பீங்க?

நிகழ்ச்சியை முழுமையாகப் பார்க்க : இங்கே.

அதே தினத்தில் வெளியான தினமலர் செய்தி : கேள்வியே கேட்காத ஆறு தமிழக எம்.பி.,க்கள் : பார்லியில் தான் இந்த நிலைமை

அல்கா – குட்டி சித்ரா!

நடந்து கொண்டிருக்கும் விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 – தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகள் பாடுவதால் ரசிப்பதற்குரிய அம்சங்கள் நிறையவே இருக்கின்றன. பயம், வெட்கம் ஏதுமின்றி அசால்ட்டாக வந்து பாடிவிட்டுப் போகும் சிறுவர்களையும் சிறுமிகளையும் பார்க்கும்போது, ‘நாமெல்லாம் சிறுவயதில் எவ்வளவு தத்தியாக இருந்திருக்கிறோம்’ என்று நினைத்து ஏங்குவதை ஏனோ தடுக்க முடியவில்லை.

ஆனாலும் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, ‘அந்தப் பொண்ணு எல்லாம் எப்படி தைரியமா பாடுது.. நீயும் இருக்கியே? எப்பப்பார்த்தாலும் கேம்ஸ் மட்டும்தானா? பாட்டுக் கத்துக்கச் சொன்னா கத்துக்கறியா?’ என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தாமல் இருந்தால் சரி.

இந்த ஸீஸனில் என்னைக் கவர்ந்த குழந்தைகள் மூவர். மூன்றாவது குழந்தை நித்யஸ்ரீ. தைரியமாகப் பாடும் குணமே இந்தக் குழந்தையின் பெரிய ப்ளஸ். குத்துப் பாட்டு ரகங்களுக்குப் பொருத்தமான கணீர்க் குரல். துறுதுறுவென ஆடிக் கொண்டே பாடுவது தனி அழகு. மேலும் சில சுற்றுகள் வரை நித்யஸ்ரீ தாக்குப் பிடிக்கும் என்பது என் கணிப்பு.

நித்யஸ்ரீயை ரசிக்க.

இரண்டாவது – ஒரு சிறுவன். ஸ்ரீகாந்த். இந்த ஸீஸனில் எல்லாருக்குமே செல்லம் இந்தச் சிறுவன்தான். போட்டியாளர்களிலேயே ஜூனியர். கடினமான பாடல்களையும் அசால்ட்டாகப் பாடும் ஸ்ரீகாந்தை சலிக்காமல் ரசித்துக் கொண்டே இருக்கலாம். அவன் பாடும்போது பிசிறுகள் தெரிந்தால்கூட அது கேட்பவர்களுக்கு உறுத்துவதில்லை. தங்கள் மகன் பாடும்போதும் சுட்டியாகப் பேசும்போது அந்தப் பெற்றோர்கள் பெருமிதத்தில் வெளிப்படுத்தும் முக பாவனைகள் அழகு. இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுவரை மிகவும் ஜூனியரான ஸ்ரீகாந்த் வருவான் என்று சொல்ல முடியாது. ஆனால் வருங்காலத்தில் ஸ்ரீகாந்த் நிச்சயமாக ஒரு நட்சத்திரம்தான். (ஸ்ரீகாந்த் பாடிய பாடல் ஒன்று)

இந்த ஸீஸனில் நான் அதிகம் ரசிக்கும் பெண் குழந்தை அல்கா அஜீத். இன்னொரு அனகா என்றுதான் சொல்வேன். வாராவாரம் அல்கா எப்போது பாடுவாள் என்று ஆவலோடு காத்திருக்கிறேன். எனது மொபைலை இப்போது அல்கா பாடிய வீடியோ க்ளிப்பிங்ஸ்தான் ஆக்கிரமித்திருக்கின்றன. கண்டிப்பாக இறுதிச் சுற்றுவரை வரக்கூடிய திறமை கொண்ட பெண். மேற்கொண்டு நான் சொல்வதைவிட, அல்கா பாடுவதை நீங்களே கேளுங்கள்.

பாடல் 1

பாடல் 2

மேலும் இரண்டு வீடியோ – டௌன்லோட் செய்ய.

நிகழ்ச்சியின் நடுவர்கள் மனோ, சித்ரா, மால்குடி சுபா. குழந்தைகளை முதலில் பாராட்டிவிட்டு, அவர்களைக் காயப்படுத்தாதபடி விமரிசனங்களை முன் வைக்கிறார்கள். குறைகள் சொல்லுவதைவிட, குழந்தைகள் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்காக யோசனைகள் சொல்கிறார்கள். குறிப்பாக மனோ, நிகழ்ச்சியைக் கலகலப்பாக கொண்டு செல்கிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இதுவரை வந்தவர்களிலேயே சூப்பர் ஜட்ஜ் மனோதான்.