தோனியின் 10 கட்டளைகள்

விகடனில் நான் எழுதிவரும் நம்பர் ஒன் தொடர் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வாரந்தோறும் படித்து தங்கள் அன்பை, கருத்துகளை, விமரிசனங்களைத் தெரிவிக்கும் வாசகர்களுக்கு, நண்பர்களுக்கு என் அன்பும் நன்றியும்.

குறிப்பாக பாக்ஸர் மேவெதர் கட்டுரைக்கு பெரும் வரவேற்பு. அதுவும் மே 2ல் மேவெதர் தனது 48வது வெற்றியைப் பதிவு செய்ய, தமிழ் ஊடகங்கள் பலவற்றிலும் (முதன்முறையாக) மேவெதர் பற்றிய செய்திகள். சிஎஸ்கேவால் தோனியும் எப்போதோ தமிழராகிவிட்டார். இந்த இதழில் நம்பர் ஒன் – தோனி குறித்த கட்டுரைக்கு ஏகோபித்த வரவேற்பு. குறிப்பாக தோனியின் வாழ்க்கையில், அவர் கடைபிடிக்கும் உத்திகளில் இருந்து எடுத்தளித்த ‘களத்தில் வெற்றிக்கு கேப்டன் தோனியின் 10 கட்டளைகள்’ இப்போது பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட பல தளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கின்றன.

அவை இதோ.

களத்தில் வெற்றிக்கு, கேப்டன் தோனியின் 10 கட்டளைகள் **

ஆனந்த விகடன் – நம்பர் 1 மகேந்திர சிங் தோனி கட்டுரையில் இருந்து..

* கூட்டத்துக்காக விளையாடாதே… உனக்காகவும் விளையாடாதே. அணிக்காக மட்டும் விளையாடு!

* போட்டிக்கு முன் நல்ல ஓய்வு, மன அமைதி அவசியம். களத்துக்கு வெளியே கிரிக்கெட் பேசாதே!

* பிறர் மீதான கோபத்தை, களத்தில் காட்டாதே. அதற்கு டிரெஸ்ஸிங் ரூம் இருக்கிறது!

* எதிர் அணியினரை எப்போதும் குறைவாக எடைபோடாதே!

* எந்த நெருக்கடியிலும் நிதானம் இழக்காதே. தலைவனின் பதற்றம், அணியையும் தொற்றிக்கொள்ளும். எதையும் எளிமையாக எதிர்கொள்!

* எந்தப் பந்திலும் ஆட்டத்தின் தலை விதி மாறலாம். ஒவ்வொரு பந்துக்கும் வியூகம் அமை!

* வெற்றி மீது ஆசை வை. எப்போதும் 100 சதவிகிதத்துக்கும் மேலான உழைப்பை களத்தில் காட்டு. போட்டியின் முடிவுகளைப் பற்றி அலட்டிக்கொள்ளாதே!

* வேகமாக முடிவெடு. எடுத்த முடிவில் நம்பிக்கை வை!

* தவறுகளைத் தைரியமாக ஒப்புக்கொள்!

* தோல்விக்கு நீ மட்டும் பொறுப்பு ஏற்றுக்கொள்; வெற்றிக்கு அணியினரைக் கைகாட்டு!

 

 

தமுக்கம் மைதானத்தில் ஐபிஎல் நடைபெறும் : அழகிரி அதிரடி

‘ஐபிஎல் என்பது இந்தியாவின் பாரம்பரியம். அதை மதுரையிலேயே நடத்திக் காட்ட நான் தயார்’ என்று திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி கூறியுள்ளார்.

நேற்று இரவு மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது :

‘இந்தியன் பிரிமியல் லீக், இந்தியாவில்தான் நடத்த வேண்டும். தேர்தல் என்ற ஒரு காரணத்தினால் அதை இங்கிலாந்துக்கோ, தென் ஆப்பிரிக்காவுக்கோ மாற்றுவதை திராவிட இதயங்கள் விரும்பாது. ஆகவே இந்தியாவின் பாரம்பரியம் நிறைந்த, ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் மதுரையிலே யே நடத்திக் காட்ட நான் தயாராக இருக்கிறேன். இங்கே தமுக்கம் இருக்கிறது,  வண்டியூர் தெப்பக்குள மைதானம் இருக்கிறது, மேலும் பல பள்ளி, கல்லூரிகளின் மைதானங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும்விட விளையாட வரும் வீரர்களுக்கு எமது தொண்டரடிப்படையினர் குவாலிஸ்களில் வலம்வந்து தக்க பாதுகாப்புகளை அளிப்பார்கள்.  இதனால் மதுரையில் மக்களவைத் தேர்தல் பணிகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.  திருமங்கலம் இடைத்தேர்தல் போலவே எல்லாம் சுபிட்சமாக நடக்கும். இந்தியாவின்  நலன் கருதி, கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பத்துக்காக நான் எடுத்திருக்கும் இந்த  முடிவை லலித்மோடி வரவேற்பார் என்று நம்புகிறேன்.’

இவ்வாறு அழகிரி பேசினார்.

இதற்கிடையில் தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் போட்டிகளை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத்  தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா  அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

‘ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மதுரையில் நடத்த வைத்து அதை எம்பிஎல் (மதுரை  பிரிமீயர் லீக்) என்று பெயர் மாற்ற கருணாநிதியின் குடும்பத்தினர் முயற்சி செய்கிறார் கள். கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதன்மூலம் தேர்தலில், மக்களின் கவனத்தைத் த ங்கள் பக்கம் இழுக்கலாம் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள். அவர்களுக்கும் எம்பிஎல்லும் கிடைக்கப்போவதில்லை, ஒரு எம்பி சீட்டும் கிடைக்கப்போவதில்லை.  டுவெண்டி டுவெண்டி போட்டிகள் மதுரையிலேயே நடந்தாலும், கருணாநிதியின் கட்சிக்கு நாற்பது தொகுதிகளிலும் தோல்விதான் கிடைக்கப்போகிறது என்பது மக்களுக்கே  தெரியும். தேர்தல் கமிஷனும் இந்திய கிரிக்கெட் வாரியமும் கருணாநிதி குடும்பத்தின்  குறுக்குபுத்தி வேலைகளுக்கெல்லாம் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்.’

இவ்வாறு ஜெயலலிதா தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இன்று காலையில் வீரத்தளபதி என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் நடிகர்  என்று சொல்லிக்கொள்ளும் ஜே.கே. ரித்தீஷ், அவசர அவசரமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘மதுரையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் பட்சத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தலைமையேற்று விளையாட கேப்டன் தோனி  மறுத்துள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த நட்சத்திர கிரிக்கெட்  போட்டியில் வீரமாக விளையாடிய அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். சென்னை  சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்க நான் தயார்’  இவ்வாறு அவர் கூறினார்.