ரஜினிகாந்த் 1982

‘புதியவர்கள் சிலர் வந்து என்னை நடிக்க அழைத்தார்கள். நீங்கள் நடிப்பதாகச் சம்மதம் தெரிவித்தால் போதும், பிறகு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள். இதற்கு என்ன அர்த்தம்?

என் பெயரை விளம்பரப்படுத்தி என்னைக் கொண்டு ஆதாயம் பெற வேண்டும் என்பது இவர்களது முதல் குறிக்கோள். எனக்கு ஆதாயமாக இருக்கக்கூடிய பெரிய பேனர்களை நான் தேர்ந்தெடுப்பதில் என்ன தப்பு? டென்ஷன் எல்லாம் எனக்குப் பிடிக்காது. என் படத்தை இடைஞ்சல்கள், தகராறு இல்லாமல் ஒழுங்காக எடுத்து முடிப்பார்களா என்பதில்தான் நான் அக்கறை செலுத்துவேன். என் பட முதலாளிகளுக்கு எப்படிப்பட்ட கேரக்டரில் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்பது தெரியாமல் போகுமா.

என்னைப் பொறுத்தவரை வித்தியாசமான காரெக்டர்கள், லட்சியப் படம், புதுமைப் படைப்பு என்றெல்லாம் நான் வீணே அலட்டிக் கொள்வதில்லை.’

-ரஜினிகாந்த் (மே 1982-பொம்மை)

(நன்றி: பா. தீனதயாளன்)