லொள்ளு அவார்ட்ஸ் 2012

1 kadhalil

2 ammaavin
3

4 pandi

5 attak

6 manam

7 thadayara

8 nan e

9 kalakalappu

10 Avengers

11 murattu

12 maalai

13 naduvula

14 saguni

15 sattam

16 kumki

17 mugamodi

18 neethane

22 kk

19 thnadavam

2012ன் பெரும்பான்மையான பொழுதுகளை இருளில் கழித்த, வருகின்ற ஆண்டிலும் இருளில் வாழப் போகிற தமிழக மக்களாகிய நமக்கு இந்த விருதை நாமே சமர்ப்பித்துக் கொள்வோம்.

20 muppozhudum

மக்கள் விரோதப் போக்குடன் நடந்துகொள்வதே மத்திய அரசின் தலையாய கடமையாகி விட்டது. இதே போன்ற அற்புதமான பொருளாதார நிலை தொடர்ந்தால், வருங்காலம் ஓஹோ! ஆக, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியக் குடிமக்களாகிய நமக்கு கீழ்கண்ட விருது சமர்ப்பணம்!

21 lifeofpi

தேர்தல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்

மே 13 புதன்கிழமை
உங்கள் முத்திரை டீவி வழங்கும்
தேர்தல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்

காலை 6 மணிக்கு
சிங்கள இசை
திடீர்த் தமிழீழ ஆதரவாளர்கள் வழங்கும் ‘கர்நாடக’ இசை விருந்து

காலை 7 மணிக்கு
வணக்கம் தமிழ்நாடு நிகழ்ச்சியில்
சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்
மாண்புமிகு தமிழக புதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்.

கிளிப்பிங்ஸ்:

‘தமிழர்களே.. டாக்டர் கலைஞர் அவர்களின் மகனாக உட்கார்ந்து கேட்கி றேன். உரிமையோடு கேட்கிறேன். உணர்வோடு கேட்கிறேன். உங்களுக்காக கேட்கிறேன். கேட்க வேண்டும் என்பதற்காக கேட்கிறேன். எனது தந்தை அப்பல்லோவிலே முடியாமல் படுத்திருந்தபோது வந்து எட்டிப் பார்க்கத் திராணியில்லாத ராமதாஸ், உண்மையிலேயே டாக்டர்தானா?’

காலை 9 மணிக்கு
காலணியாதிக்கம்

ப. சிதம்பரம் சிறுவயதில் இருந்து தான் சேகரித்து வைத்திருக்கும் காலணிகள் குறித்து கலகலப்பாக தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் வித்தியாசமான நிகழ்ச்சி.

காலை 9.30க்கு
உண்ணாவிரத சமையல்

உண்ணாவிரத நாள்களில் என்னென்ன சமைக்கலாம் என்று விசேஷ சமையல் குறிப்புகளை வாரி வழங்குகிறார்கள் திருமதி. தயாளு, திருமதி. ராஜாத்தி

காலை 10 மணிக்கு
தாவுடா ராமா, தாவு!

தேர்தலுக்குத் தேர்தல் வெ.மா.சூ.சொ. இல்லாமல் கூட்டணி விட்டுக் கூட்டணி தாவுவது எப்படி என்று தங்கள் பொது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கற்றுக்கொடுக்கிறார்கள் அரசியல் ‘கரை’கண்ட பிரபலங்கள்.

காலை 10.30 மணிக்கு
சிறப்பு பட்டிமன்றம்.
கள்ள ஓட்டில் கைதேர்ந்தவர்கள் ஆளுங்கட்சியினரே! எதிர்க்கட்சியினரே!

பல களம் கண்ட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பூத் ஏஜெண்டுகள் தங்கள் திறமையை நிரூபிக்க வாதங்களால் போராடும் அடிதடி ரணகள பட்டிமன்றம்.

காலை 11.30 மணிக்கு
தமிழக இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் முதல் முறையாக,
அம்பலத்துக்கு வந்து சில மாதங்களே ஆன
ஜெ. ஜெயலலிதா, பொன்னையன், ஓ. பன்னீர்செல்வம், சசிகலா நடித்த
அதிரடி சூப்பர் ஹிட் தமிழீழத் திரைப்படம்

சின்னத்தில் முத்தமிட்டால்

மாலை 4.00 மணிக்கு
நான் பிரதமர் ஆனால்..

வைகோ, விஜயகாந்த், சரத்குமார், திருமாவளவன் ஆகியோர் தாங்கள் கண்ட பகல் கனவு பற்றி சுவைபடக் கூறுகிறார்கள்.

மாலை 5.00 மணிக்கு
கன்னி ஓட்டு!

வாழ்க்கையில் முதன்முறையாக வாக்களிக்கப் போகும் நடிகை நமீதா, பூத்துக்குச் சென்று வாக்களிக்கும் நிகழ்ச்சி – நேரடி ஒளிபரப்பு!

மாலை 5.30 மணிக்கு
கடுங்காப்பி வித் சோனியா!

தங்கபாலு, இளங்கோவன், ஜி.கே. வாசன், கிருஷ்ணசாமி நால்வரும் இணைந்து, ஒருத்தரை ஒருத்தர் கனிவாகப் போட்டுத் தள்ளும் பாரம்பரிய நிகழ்ச்சி.

மாலை 6.30 மணிக்கு
உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக
தெருவுக்கு வந்து சிலநாள்களே ஆன
படுதோல்வி திரைப்படம்
தேர்தலில் கட்டிய வைப்புத் தொகைக்காக, நாக்குதள்ள போராடும் மூன்று இளைஞர்களின் கண்ணீர்க் கதை
கார்த்திக், டி. ராஜேந்தர், மன்சூர் அலிகான் நடித்த

டெபாசிட்

கலகல டிராஜடி திரைப்படம்

இரவு 10.00 மணிக்கு
மௌன அஞ்சலி!

நடந்துமுடிந்த ஜனநாயகப் படுகொலைக்கான சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி!

தேர்தல் தின சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழங்கும் ஒரே விளம்பரதாரர்
எளிமை நாயகன் ஜே.கே. ரித்தீஸ்

வாக்காளர்களே!

வரும் தேர்தலைக் கொண்டாடுவோம்!
அடுத்த தேர்தல்வரை திண்டாடுவோம்!

தமுக்கம் மைதானத்தில் ஐபிஎல் நடைபெறும் : அழகிரி அதிரடி

‘ஐபிஎல் என்பது இந்தியாவின் பாரம்பரியம். அதை மதுரையிலேயே நடத்திக் காட்ட நான் தயார்’ என்று திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி கூறியுள்ளார்.

நேற்று இரவு மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது :

‘இந்தியன் பிரிமியல் லீக், இந்தியாவில்தான் நடத்த வேண்டும். தேர்தல் என்ற ஒரு காரணத்தினால் அதை இங்கிலாந்துக்கோ, தென் ஆப்பிரிக்காவுக்கோ மாற்றுவதை திராவிட இதயங்கள் விரும்பாது. ஆகவே இந்தியாவின் பாரம்பரியம் நிறைந்த, ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் மதுரையிலே யே நடத்திக் காட்ட நான் தயாராக இருக்கிறேன். இங்கே தமுக்கம் இருக்கிறது,  வண்டியூர் தெப்பக்குள மைதானம் இருக்கிறது, மேலும் பல பள்ளி, கல்லூரிகளின் மைதானங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும்விட விளையாட வரும் வீரர்களுக்கு எமது தொண்டரடிப்படையினர் குவாலிஸ்களில் வலம்வந்து தக்க பாதுகாப்புகளை அளிப்பார்கள்.  இதனால் மதுரையில் மக்களவைத் தேர்தல் பணிகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.  திருமங்கலம் இடைத்தேர்தல் போலவே எல்லாம் சுபிட்சமாக நடக்கும். இந்தியாவின்  நலன் கருதி, கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பத்துக்காக நான் எடுத்திருக்கும் இந்த  முடிவை லலித்மோடி வரவேற்பார் என்று நம்புகிறேன்.’

இவ்வாறு அழகிரி பேசினார்.

இதற்கிடையில் தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் போட்டிகளை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத்  தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா  அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

‘ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மதுரையில் நடத்த வைத்து அதை எம்பிஎல் (மதுரை  பிரிமீயர் லீக்) என்று பெயர் மாற்ற கருணாநிதியின் குடும்பத்தினர் முயற்சி செய்கிறார் கள். கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதன்மூலம் தேர்தலில், மக்களின் கவனத்தைத் த ங்கள் பக்கம் இழுக்கலாம் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள். அவர்களுக்கும் எம்பிஎல்லும் கிடைக்கப்போவதில்லை, ஒரு எம்பி சீட்டும் கிடைக்கப்போவதில்லை.  டுவெண்டி டுவெண்டி போட்டிகள் மதுரையிலேயே நடந்தாலும், கருணாநிதியின் கட்சிக்கு நாற்பது தொகுதிகளிலும் தோல்விதான் கிடைக்கப்போகிறது என்பது மக்களுக்கே  தெரியும். தேர்தல் கமிஷனும் இந்திய கிரிக்கெட் வாரியமும் கருணாநிதி குடும்பத்தின்  குறுக்குபுத்தி வேலைகளுக்கெல்லாம் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்.’

இவ்வாறு ஜெயலலிதா தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இன்று காலையில் வீரத்தளபதி என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் நடிகர்  என்று சொல்லிக்கொள்ளும் ஜே.கே. ரித்தீஷ், அவசர அவசரமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘மதுரையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் பட்சத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தலைமையேற்று விளையாட கேப்டன் தோனி  மறுத்துள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த நட்சத்திர கிரிக்கெட்  போட்டியில் வீரமாக விளையாடிய அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். சென்னை  சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்க நான் தயார்’  இவ்வாறு அவர் கூறினார்.

கவர் ஸ்டோரி உருவாக்குவது எப்படி?

பிரபல வாரமிருமுறை பரபரப்பு பத்திரிகையின் ஆசிரியர் அறை. கொஞ்சம் சூடாகவே இருக்கிறார் ஆசிரியர். ‘சீனியர் புறா’, ‘சுவாமி சுனாமியானந்தா’ என்ற புனைப் பெயரில் எழுதும் இரு உதவி ஆசிரியர்கள் அவர் முன் அமைதியாக பவ்யமாக உட்கார்ந்திருக்கிறார்கள்.

ஆசிரியர் : போன நாலு இஸ்யூல நம்ம சர்க்குலேஷன் பத்து சதவிகிதம் குறைஞ்சிருக்கு. நம்ம போட்டி பத்திரிக்கைக்கு ஏழு சதவிகிதம் கூடியிருக்கு. இப்படியே போனா ஊத்திக்கும். எல்லாரும் வேற எங்கேயாவது வேலை கிடைக்குமான்னு தூண்டில் போட வேண்டியதுதான். நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோன்னு எனக்குத் தெரியாது. பத்திக்குற மாதிரி ஒரு மேட்டரை கெளப்பி விடுறீங்க. அந்த மேட்டரை வைச்சே இன்னும் ஏழெட்டு இஸ்யூவோட கவர் ஸ்டோரியை காரசாரமா பண்ணிடனும். விட்ட சர்க்குலேசனை கிச்சுன்னு ஏத்தணும். எந்த அரசியல்வாதி வாயைப் புடுங்குறீங்களோ, இல்ல எந்த நடிகையை சர்ச்சையில மாட்டி விடுவீங்களோ, எந்த கிளுகிளு சாமியாரை உருவாக்குவீங்களோன்னு எனக்குத் தெரியாது. இன்னும் ஒரு மணி நேரத்துல என் டேபிள்ல சூட்டைக் கெளப்புற கவர் ஸ்டோரி இருக்கணும். நீங்க போகலாம்.

கொஞ்சம் கிறுகிறுக்கும் தலையுடன் வெளியே வரும் சுனாமியும், புறாவும் பேப்பர் பேனாவுடன் சென்று ஒரு டேபிளில் அமர்கின்றனர். ஐந்து நிமிட மௌனத்துக்குப் பிறகு.

சுனாமி : ஆங்.. ஐடியா. நம்ம அரசியல்வாதி கால்’வாய்’ கண்ணாயிரத்துக்கு போனைப் போடு. அவங்கிட்ட எதையாவது போட்டு வாங்கலாம். அதை வைச்சு ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கிரலாம்.

(புறா போனை டயல் செய்து ரிஸீவரைத் தர)

சுனாமி : அண்ணே வணக்கம்னே.. நாந்தான் சுனாமி பேசறேன். சுகம்தானா?

கால்வாய் : வணக்கம்வே! என்னவே போனமொற நம்ம பத்திரிக்கையில நம்ம கட்சிக்காரப்பயலைப் பத்தி இப்படி கண்டதும் எழுதிப்புட்ட! நானே உனக்கு பூசை போடணும்னு நெனைச்சுக்கிட்டு இருந்தன்! நீயா வந்து வசமா சிக்கிக்கிட்டவே!

சுனாமி : என்னண்ணே நீங்க. என்னப் போயி சந்தேகப்படுறீங்களேண்ணே! நான் நீங்க வெட்டிப் போட்ட நகத்துல இருக்குற அழுக்கைப் பத்திக் கூட தப்பா எழுத மாட்டேன், உங்களுக்குத் தெரியாதாண்ணே! அது ஒரு புது ரிப்போர்ட்டர் பய செஞ்ச வேலைண்ணே! போன வாரம் நான் லீவுண்ணே! அதான் என்னை மீறி இப்படி ஆயிடுச்சுண்ணே! பாத்தீங்களாண்ணே, எம்புட்டு விசுவாசமுள்ள என்னைப் போயி..

கால்வாய் : அதானப் பாத்தேன். சரி விடுவே! இப்ப என்னவே விசேஷம்?

சுனாமி : அதை நீங்கதாண்ணே சொல்லணும். நேத்து மொளச்ச பயலுக திமிரா எகத்தாளமா ஏதாவது ஏடாகூட அறிக்கை விட்டுக்கிட்டு தலைப்புச் செய்தி ஆக்கிட்டு இருக்காணுங்க! உங்க பவரை நீங்க காட்ட வேணாமாண்ணே!

கால்வாய் : இப்ப என்ன பண்ணனுங்கற?

சுனாமி : புதுசா அந்த நடிகரு ரமணராஜ் கட்சி தொடங்கியிருக்காரே அவரு உங்ககூட கூட்டணி வைக்க தொங்கிக்கிட்டு இருக்கறதா பேச்சு அடிபடுதே, உண்மையாண்ணே?

கால்வாய் : சும்மாக் கெடவே! அவன் நம்ம சாதிக்காரப் பய. அரசியல்ல பழம் தின்னு கொட்ட போட்டவன் நான். ஒரு மருவாதைக்கு தேடிவருவான்னு நெனைச்சேன். இதுவரைக்கும் வரல. எலெக்ஷன் வரும்ல அப்ப பாத்துக்கலாம்.

சுனாமி : சரிங்கண்ணே. நீங்க ரொம்ப பிசியா இருப்பீங்க. தொந்தரவுக்கு மன்னிச்சுக்கோங்கண்ணே! வைச்சிடுறேன். (போனை கட் செய்து விட்டு, புறாவிடம்) செம மேட்டர் கிடைச்சுடுச்சு. டைட்டில் இதுதான். ‘தலைகணத்தில் தடுமாறுகிறாரா ரமணராஜ்?!’ – தலைவர்கள் அதிருப்தி. எப்படி?

புறா : அப்படிப்போடு. இதை அப்படியே விடக்கூடாது. இன்னும் கெளறி விடலாம். கொஞ்சம் இருங்க. (ஒரு எண்ணை டயல் செய்கிறார்.) வணக்கம். நான் புறா பேசுறேன். புரட்சி லீடர் ரமணராஜ் இருக்காருங்களா.

எதிர்முனை : வணக்கம். வணக்கம். நான் லீடரோட செகரட்டரி லிங்கம்தான் பேசறேன். லீடர் ஹைதராபாத் ஷூட்டிங் போயிருக்காரு. என்ன விஷயம்ணு சொல்லுங்க. எதுவும் முக்கியம்னா நான் லீடர்கிட்ட கேட்டுச் சொல்லுறேன்.

புறா : என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்க? அந்த சாதிக் கட்சித் தலைவர் ‘நம்ம லீடருக்கு பணிவே கெடையாது. அவுத்த வுட்ட ஜல்லிக்கட்டு காளை மாதிரி திமிறிக்கிட்டு அலையறாரு. மக்கள் மூக்கணாங்கயிறு போட்டுருவாங்க’ன்னு இஷ்டத்துக்கு அறிக்கை விட்டிருக்காரு. நீங்க என்னடான்னா ஒண்ணும் நடக்காத மாதிரி கேக்கறீங்க?

எதிர்முனை : அப்படியா! எதுல சொன்னாரு. எனக்கு ஏதும் நியூஸ் வரலியே?

புறா : அவரோட சேனல்லதான் சொன்னாருங்கிறேன். அதுபோக இப்பத்தான் அவரை பேட்டி எடுத்தோம். அதுலயும் நம்ம லீடரை இப்படியெல்லாம் பேசிப்புட்டாரு. மனசு கேக்கல. அதான் உங்க காதுல விசயத்தைப் போட்டுட்டு, அப்படியே லீடர்கிட்ட கருத்து வாங்கிடலாம்னுதான் போனைப் போட்டேன்.

எதிர்முனை : லீடர் ஷூட்டிங் முடிச்சுட்டு, தன் பையன் பொறந்த நாளை சித்தூர் பக்கத்துல உள்ள ஒரு கோயிலுக்கு போய் கொண்டாடிட்டு நாலு நாள் கழிச்சுத்தான் சென்னைக்கு வர்றாரு. அப்ப லீடர் கண்டிப்பா நேரம் ஒதுக்கிப் பேசுவாரு.

புறா : ரொம்ப நல்லது சார். (போனை கட் பண்ணி விட்டு) மேட்டரை டெவலப் பண்ணிக்கோங்க.. ‘ஆந்திரா பக்க்கத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் ரமணராஜ் ரகசிய யாகம்! நரபலி கொடுத்தது உண்மையா?’ எப்படி.

சுனாமி : சூப்பரப்பு.

புறா : ஆனா மேட்டர்ல பரபரப்பு இருக்கு. ஆனா கிளுகிளுப்பே இல்லையே. என்ன பண்ணலாம்?

சுனாமி : எதாவது நடிகையை இழுத்து உட்டுடலாம். பரபரப்பு + கிளுகிளுப்பு. நாமளும் பேஜ் லே-அவுட்டை கவர்ச்சியா பண்ணலாம்.

புறா :  இந்த இஸ்யூக்கு இது தாங்கும். அடுத்த இஸ்யூக்கு நடிகை கிஷிதாவை கிள்ளி உட்டுருவோம்.

சுனாமி : எப்படி?

புறா : ‘டேட்டிங்’ பத்தி ஏதாவது கேப்போம். அது தமிழ் தெரியாம ஏதாவது உளறி வைக்கும். ‘டேட்டிங் போவது பெண்களின் கடமை’ன்னு நியூஸ் ஆக்கிருவோம். அப்புறம் கொடும்பாவி எரிப்பாங்க. கேஸ் போடுவாங்க. ஆர்ப்பாட்டம் நடத்துவாங்க. ‘டேட்டிங்’குக்கு ஸ்பெல்லிங் தெரியாதவனுங்க கூட தெனாவெட்டா அறிக்கை உடுவாங்க.

சுனாமி : இப்படி ஒரு பிரச்னையைக் கெளப்பி விட்டா கண்டிப்பா கால்வாய் ‘கலாசாராம் காராச்சேவு’ன்னு கொதிச்சு எழுவாரு. ஆனா கிஷிதா நம்ம ரமணராஜோட தொடர்ந்து மூணு படம் சோடி கட்டிட்டு வர்ற நடிகை. அதனால ரமணராஜ் வேற வழியில்லாம படத்துல இருந்து கிஷிதாவைத் தூக்கிக் கெடாச வேண்டியது வரும்.

புறா : இதை அப்படியே விடலாமா, எவனாவது இந்த கேப்ல நெட்ல கிஷிதா மூஞ்சை மார்ஃப்பிங் பண்ணி ஏதாவது கிளுகிளு போட்டாவை விடுவான். உடனே கிஷிதாவுக்கும் சர்வதேச கொலைகாரன் அமாம் உபருல்லாக்கும் தொடர்பிருக்குன்னு தெரிஞ்சதாலதான் ரமணராஜ் தன்னோட படத்துல இருந்து தூக்குனாருன்னு ஒரு கவர் ஸ்டோரி பண்ணிடலாம்.

சுனாமி : இதுல ஏதாவது சாமியாரை இழுத்து விட்டுட்டோம்னா இன்னும் கனலா இருக்கும்.

புறா : அவ்ளோதான. ‘முழியாங்கண்ணன்பட்டி மயிர் சாமியார்’னு ஒரு கேரக்டரை உள்ள நுழைச்சுருவோம். இந்த சாமியார்கிட்டதான் அமாவாசை அன்னிக்கு நைட்டோட நைட்டா போயி ரமணராஜ் மயிர் ஜோசியம் பாத்தாரு. அவரோட மயிர் அமைப்புப்படி அவருக்கு முன்னந்தலைல மூணு சென்டி மீட்டருக்கு சொட்டை விழுந்துருக்கறதால அவரு கட்சியோட பேரை மாத்தணுமாம். ‘க’ எழுத்துல பேரு ஆரம்பிக்குற அரசியல்வாதிங்க கூட கூட்டணி வெச்சுக்கக்கூடாதாம். அதுக்கு பரிகாரமா அடுத்த அமாவாசைக்கு 108 வழுக்கைத் தலையர்களுக்கு விக் தானம் பண்ணப் போறாராம். அதுக்காக 108 சொட்டை மண்டைங்கள கட்சிக்காரங்க மும்முரமா தேடிக்கிட்டு இருக்காங்களாம். எப்படி நம்ம நியூஸ்?

சுனாமி : அந்த முடி சாமியார் மேல நாலு கேஸ் இருந்தாத்தான் மேட்டர் வெயிட்டா இருக்கும். எப்படியாவது தோண்டித் துருவி அந்த சாமியார் மேல கேஸைக் கொண்டு வந்துரலாம். அதுவும் சுண்டக் கஞ்சி கடத்தல் கேஸ் ஏதாவது இருந்தா கலக்கலா இருக்கும்.

புறா : சாமியார் கூட ‘சுண்டக் கஞ்சி கடத்தல்’ல தொடர்பு வைச்சிருந்த அழகின்னு எவளாவது அடுத்து சிக்காமலா இருப்பா. ‘சுண்டக் கஞ்சி கடத்தல் தேவதை’யோடு தொடர்புடைய அரசியல்வாதிகள்னு எல்லாக் கட்சியில இருந்தும் வந்து தானா பட்சிங்க சிக்குவாங்க.

புறா : இப்படியே போனா அடுத்த சட்டசபைத் தேர்தல் வர்ற வரைக்கும் கவர் ஸ்டோரிக்கு தட்டுப்பாடே வராது. கலக்கிப்புடலாம்.

சுனாமி : சரி சரி. நான் ஸ்டோரியை எழுதுறேன். நீ போய் முன் அட்டையையும், போஸ்டரையும் லே அவுட் பண்ண ஆரம்பி. ஏதாவது போட்டோ தேறுதான்னு பார்ப்போம். எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி கெளப்பி விட வேண்டியதுதான்.

புறா : சூப்பரு. இந்த இஸ்யூ சர்குலேசன் ஓஹோதான்.  நீ எடிட்டர்கிட்ட ஓ.கே. வாங்கிடு. நான் லே-அவுட்டுக்குப் போறேன்.

(லொள்ளு தர்பார் – கிழக்கு வெளியீடு)