Tag Archives: எம். ஆர். ராதாயணம்

எம்.ஆர். ராதாவின் ராவணன்

காமவல்லி (சூர்ப்பநகை) : யாரையா நீர்? ராமன் : நான்.. நான்.. பெரிய வீரன் கா.வ.: (சிரித்துக்கொண்டே) அதுதான் தெரியுதே நீ வில் பிடித்திருக்கிற லட்சணத்திலிருந்தே! (ராமன் வில்லைச் சரியாகப் பிடித்துக் கொள்கிறான்.) ராம : நான் பெரிய அரசகுமாரன். எனக்கு இன்னும் (கழுத்தைக் காட்டி) அது… ஆகலே, அதுக்காக… கா.வ.: ஏய் மரியாதையாகப் பேசு, நான் இந்த மண்டலத்து அரசப் பிரதிநிதி காமவல்லி. இப்பவாவது இந்த இடத்தை விட்டு அகன்றுவிடு. உம்… ராம : நான் [...]

Posted in அரசியல், பதிவுகள், புகைப்படம், மனிதர்கள் | Also tagged , , , , , , , , | 6 Responses

‘இது என்ன கூத்தாடிகள் ராஜ்யமா?’ – பெரியார்

1967ல் விடுதலை நாளிதழில் பெரியார் தனது பொங்கல் செய்தியை வெளியிட்டார். கடந்த நாள்களில் நடந்த சம்பவங்களால் அவரது மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தது என்பதை அந்த எழுத்துகளை வெளிப்படுத்தின. காகிதமே பொசுங்கிப் போகுமளவுக்குச் சூடாக இருந்தன அவரது வார்த்தைகள். ‘………………… சாதாரணமாக ராதாவானாலும் ராமச்சந்திரன் ஆனாலும் இவர்களுக்கு பொது மக்கள் உலகத்தில் உள்ள மதிப்பு இவர்கள் கூத்தாடிகள், வேஷம்போட்டு நடிப்பவர்கள், காசுக்காக எந்த வேஷத்தையும், எப்படிப்பட்ட இழிமக்கள் தன்மையான கதையையும் எந்த உருவத்திலும் நடிப்பவர்கள் என்பதல்லாமல் இவர்களுக்கு பொதுநல [...]

Posted in அரசியல், அறிவிப்பு, சினிமா, மனிதர்கள் | Also tagged , , , , | Leave a comment

இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை!

எம்.ஆர். ராதா நடத்திய நாடகங்களுள் ஒன்று லஷ்மி காந்தன். சமூக அவலங்களை, கலைஞர்கள் அடித்த கூத்துகளை வெட்ட வெளிச்சம்போட்டுக் காண்பிக்க நினைத்த லஷ்மி காந்தனின் கதை. நாடகத்தில் காட்சிக்கு காட்சி குபீர் சிரிப்புதான். ராதாதான் லஷ்மி காந்தனாக வேடமேற்று நடித்தார். லஷ்மி காந்தன் தன் பத்திரிகையில் தோலுரித்துக் காட்டிய விஷயங்களைவிட, ராதா தன் நாடகத்தில் வைத்திருந்த காட்சிகளும் வசனங்களும் வீரியம் மிக்கவையாக இருந்தன. லஷ்மி காந்தன் தன் உதவியாளருடன் பேசுவது போல ஒரு காட்சி. ‘கோவிந்தா, என்னடா [...]

Posted in நகைச்சுவை, பொது | Also tagged , , , , , , , | 2 Responses

அடச்சே, ராதா இல்லாமல் போய்விட்டாரே!

லஷ்மி காந்தன் – எம்.ஆர். ராதா போட்ட நாடகங்களில் ஒன்று. சமூக அவலங்களை, கலைஞர்கள் அடித்த கூத்துகளை வெட்ட வெளிச்சம்போட்டுக் காண்பிக்க நினைத்த லஷ்மி காந்தனின் கதை. ராதாதான் காந்தன். நாடகத்தில் காட்சிக்கு காட்சி குபீர் சிரிப்புதான். அந்த நாடகத்தில் ஒரு பாடல் காட்சியில் பெண் வேடமிட்டும் வந்தார் ராதா. அந்தப் பாத்திரத்தின் பெயர் ரங்கூன் கமலம். அது ஒரு டப்பாங்குத்து நடனம். ‘சிங்கார லஹரி சித்த கண சுப ஹரி’ என்று நீளும் அந்தப் பாடலுக்கு [...]

Posted in அரசியல், சினிமா, மனிதர்கள் | Also tagged , , , , , | 2 Responses