கோழிகளின் கவனத்துக்கு!

நாமக்கல், பிப். 17 – தன் மேல் நடத்தப்பட்ட முட்டைவீச்சுக்குக் காரணம் ஐஎஸ்ஐதான் என்று சு.சுவாமி தலைமறைவு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது –

‘சித்தம்பரம் தீட்சிர்ஸ்க்கு ஆதரவா நான் மனுதாக்கல் செய்ய போனுது. அப்போ வக்கீல்ஸ் முட்டைல என்ன தாக்னாங்க. அந்த முட்டைஸ் எங்கர்ந்து வந்த்துதுனு என்க்கு தெர்யும். எல்லாம் ஒஸாமா பின்லேடன் இஸ்லாமாபாத்லே சீக்ரட்டா நடத்துற ஒரு கோலி பண்ணேல இர்ந்து வந்தது. ஐஎஸ்ஐ மூல்மா இந்த்யாவுக்குள்ளே மும்பை வழ்யா சப்ளை ஆகியிருக்கு. முட்டே கடத்துன எல்லாவங்க பத்தியும் எல்லா டீடெய்லும் என் லேப்டாப்லே இருக்கு. இதுபத்தி எனக்கு ஏற்கென்வே ஒபாமா தக்வல் கொட்த்துட்டார்.

எலெக்‌ஷ்ன் முட்யற வர, இந்த்யாவுக்குள்ளே முட்டயே தடை செய்ணும்னு நான் கேஸ் போடப்போறேன். சத்துணவிலே முட்டே கொடுத்து ஸ்டூடன்ஸ்கிட்டே வன்முற வளர்க்கற கர்ணாநிதியே நான் கண்டிக்றேன். இந்த்யாவுக்குள்ள எல்லா கோலிக்கும் கருத்தடே செய்ய சென்ட்ரல் கவர்மெண்ட் உத்தர்வு போட்ணும். ஆம்லெட் சாப்டவறங்களே தேஸ்ய பாத்காப்பு சட்டத்லே கைது செய்ணும். எல்லா கோலிப்பண்ணே உரிமையாளர்களேயும் ‘பொடா’வுலே உள்ள போட்ணும்.

நூறு வாத்து முட்டே, வன்னிலே இர்ந்து ராமேஸ்வர்ம் வள்யா சப்ளை ஆகிருக்கு. அது சோ தலேல எர்யறதுக்காகன்னு என்க்கு காஞ்சி மட்லேர்ந்து இன்பர்மேஷ்ன் வந்த்ருக்கு. சோ, ஜாக்ரதயா இர்க்கணும்னு கேட்டுக்றேன்.’

இவ்வாறு அவர் தன் ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அடால்ஃப், ராஜபக்‌ஷே!


1933, ஜனவரி 30, அதாவது இரண்டாவது உலக யுத்தம் தொடங்குவதற்கு ஆறு ஆண்டுகள் முன்பு, ஹிட்லர் ஜெர்மனியின் ஆட்சியைப் பிடித்தார். 1935-ல் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லாம் ஹிட்லரால் நியூரெம்பெர்க் சட்டங்கள் (Nuremberg Laws) என்ற பெயரில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன. ஜெர்மனி வாழ் யூதர்கள் அனைவரும் தீண்டத்தகாதவர்களே. இரண்டாம் தரக் குடிமக்களே. எத்தனை தலைமுறைகள் அங்கு வாழ்ந்துவருபவர்களாக இருந்தாலும், இனி அவர்களுக்கு எந்தவித உரிமையும் துளி கூடக் கிடையாது. இவைதான் அந்தச் சட்டங்களின் சுருக்கம்.

இந்தச் சட்டவரைவுகளில் ஹிட்லரே கையெழுத்திட்டார். காவல் துறையினருக்கு முழு அதிகாரத்தை வழங்கினார். ‘யூதர்களைக் கைது செய்யுங்கள். சிறையில் அடையுங்கள். விசாரணை நடத்துங்கள். அதில் விருப்பமில்லையா, கொன்று விடுங்கள். யோசிக்கவெல்லாம் வேண்டாம். யூதர்களைக் கொல்வதே நம் கடமை’ – ஹிட்லரின் குட்டி மீசைக்குக் கிழீருந்த குரூர உதடுகள் இது போன்ற வார்த்தைகளைத்தான் வெளிப்படுத்தின.

ஹிட்லிஸ்ட் தயார் செய்து யூதர்களை அழிப்பதற்கென்றே, ஹிட்லர் இரண்டு படைகளை உருவாக்கினார். Gestapo – என்ற ரகசிய காவல்படை. SS – என்ற கருப்பு யூனிஃபார்ம் அணிந்த பாதுகாப்புப் படை.

இந்த இரண்டு படையினரும் ஒரு யூத எறும்பைக் கூட கைது செய்யலாம். வாரண்ட் எதுவும் தேவையில்லை. அவர்கள் வாழ்க்கைக்கு ‘வாரண்டி’யும் கொடுக்க வேண்டாம். கொன்று விடலாம். ஒரே ஒரு கண்டிஷன். தப்பித் தவறிகூட எந்த  ஜெர்மானியரையும் கைது செய்துவிடக் கூடாது.

அந்தப் படையினர் கண்ணில்பட்ட யூதர்களையெல்லாம் கைது செய்தனர். கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் துப்பாக்கிகளுக்கு வேலை கொடுக்க ஆரம்பித்தனர்.

உஷாரான யூதர்கள் பலர், கையில் கிடைத்த பொருள்களுடன் எங்கெங்கோ தப்பித்து ஓட ஆரம்பித்தார்கள். எங்கு சென்று அகதியாகவோ, இல்லை கைதியாகவோ வாழ்ந்தால் கூட தப்பில்லை, ஆனால் ஜெர்மனியில் செத்துவிடக்கூடாது என்று ஐந்து லட்சம் யூதர்கள் தப்பித்து விட்டனர்.

மற்றவர்கள்?

‘என்னப்பா நீங்கள்.. வேகம் பத்தாது போலிருக்கிறதே. இவ்வளவு தான் கொன்றீர்களா?’ என்று ஹிட்லர் பார்வையாலேயே கேட்டார். அவ்வளவுதான். ஒவ்வொருத்தரும் ஒரு நாளைக்கு ஒரு யூதரையாவது கொல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு கொல்ல ஆரம்பித்தார்கள். நாளடைவில் ‘நீ வெறும் பத்துதானா, நான் இருபது யூதர்களைக் கொன்றேன்’ என்று பெருமையாக ஸ்கோர் சொல்லிக் கொண்டார்கள்.

யூதர்களைப் பிடித்து அடைத்துக் கொடுமைப்படுத்துவதற்காகவும் கொல்வதற்காகவும் பிரத்யேக ‘வசதி’களுடன் கூடிய சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டன. அவை Concentration camps என்று அழைக்கப்பட்டன.

அவற்றை, சிறைச்சாலைகள் என்று சொல்வதை விட கொலைச்சாலைகள் என்றே சொல்ல வேண்டும். இம்மியளவும் வெளிச்சம் புகமுடியாத கான்கீரிட் கல்லறைகள் அவை. காற்றால் நிரம்பிய பூமியில் காற்றேயில்லாத இடங்களாக அந்தச் சிறைச்சாலைகள் விளங்கின. தண்ணீர் கிடையாது. உணவின் வாசனைகூட அந்தச் சிறைச் சாலையினுள் புகுந்தது கிடையாது. மற்றபடி தேள், பாம்பு, பல்லி, பூரான், இன்னபிற விஷ ஜந்துக்கள் பரிபூரண சுதந்தரத்துடன் வாழ்ந்த இடம் அது.

கைதிகளை விசாரிக்கும் முறையை நினைத்தாலே நெஞ்சை அடைக்கும். கைதிகளை பெரும்பாலும் நிர்வாணமாக நிற்க வைத்து தோலை கொஞ்சம் கொஞ்சமாக உறிப்பது, அடித்துக் காயப்படுத்தி அதன் மேல் வெந்நீர் ஊற்றுவது, உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக நறுக்கிப் போடுவது, தீயில் இட்டு வாட்டுவது, பிறப்புகளைத் தாக்குவது, வன்புணர்ச்சி, இன்னும் சொல்ல முடியாத பல கொடுமைகள். நரகத்தில் இருப்பதைவிட குரூர அவஸ்தைகளை யூதர்கள் அனுபவித்தனர். விட்டால் போதும் என்று உயிர் விட்டனர்.

ஹிட்லரின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில், இந்த சித்திரவதைக் கூடங்களில் சுமார் எண்ணூறு யூதர்களும் ஆயிரத்து நானூறு கம்யூனிஸ்டுகளும் கொல்லப்பட்டார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

***

முல்லைத்தீவு, பிப்.13 –

தாங்கள் கைப்பற்றும் பகுதிகளில் உள்ள தமிழர்களின் பண்பாட்டு சின்னங்களை சிங்களப் படைகள் அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. தமிழர்களின் இடங்களை சிங்களர் குடியிருப்புகளாக மாற்றும் முயற்சி நடந்து வருகிறது.

வீடுகளை இழந்து அடிமைகள்போல விரட்டப்படும் தமிழர்களை 3 ஆண்டுகள் முகாம்களில் வைத்திருக்க சிங்கள அரசு முடிவு செய்துள்ளது. இந்த 3 ஆண்டுகளில் தமிழர்களின் வாழ்வாதாரம் அனைத்தும் சிங்களர் கைக்கு பறிபோய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செய்தி : மாலைமலர்