சோனியா எஸ்கேப்பு!

அலைகடலாய் வாமவனே என்று சொல்லி
கலைஞரய்யா கட்டில்போட்டுப் படுத்துக்கொண்டார்
கொலைப்பசிடா பேமானி! கொண்டா அந்த
கொத்துக்கடலை சட்னியுடன் இட்லி என்றார்
வலை தொடங்கி நிலமெல்லாம் வாய்க்கு வந்த
வார்த்தையினால் வைததுபார் தமிழ்நாடிங்கே
தலைவலியாப் போச்சென்று தலைவர் இன்று
தலைவியுடன் தோன்றுவதை கேன்சல் செய்தார்

எலிகாப்டர் ஏறியங்கு வாரேன் என்று
எக்குத்தப்பா சொல்லிவைத்த அன்னையம்மா
கிலி பிடிச்சிப் போனதனால் கிட்டத்தட்ட
கீத்துக்கொட்டா காலியென்று புரிந்துகொண்டார்
சளிபுடிச்சிப் போச்சப்பா சனியன் இந்த
சண்டேவரை ப்ரோக்ராம்கள் டைட்டு என்று
வலியெடுத்த வேகத்தில் சொல்லிவிட்டு
வந்தவழி போனதுபார் க்ரேட் எஸ்கேப்பு.

குறிப்பு : நியூஸைக் கேள்விப்பட்டதும் குரோம்பேட்டை கவிராயர் ஜிடாக்குல தட்டுன கவித! கழுத!

Leave a Comment